பட்டர்வொர்த், ஜன - 10
பினாங்கில் இன்று முதல் அட்டவணையிடப்பட்டுள்ள குடிநீர் விநியோகத் தடைக்கு பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP) மூன்று முக்கிய கூறுகளை கருத்தில் எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறது.
சுங்ஙாய் டுவா நீர் சுத்திகரிப்பு மையத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கும் 22 தடுப்பு பராமரிப்பு திட்டங்களையும் 24 மணி நேரத்திற்குள் PBAPP முடிக்க வேண்டும் என்று பினாங்கு அமைச்சர் சொவ் கொன் யொ கேட்டு கொண்டார்.
நாளை, வியாழக்கிழமை காலை 6 மணி அளவில் அனைத்து செயலிழப்புகளும் வழக்க நிலைக்கு திரும்ப வேண்டும் என்று சொவ் கொன் யொ தெரிவித்தார்.
பெரியளவில் பாதிப்பு எதுவும் இல்லாததால் PBAPP ஏற்கனவே அறிவித்தப்படி நான்கு நாள் வரை குடிநீர் விநியோகத்தை தடை செய்யாமல் 1 நாளைக்குள் பணியை முடிக்குமாறு சொவ் கொன் யொ அறிவித்தார்.
குறுகிய காலத்தில் சரி செய்யமுடியவில்லை என்றால் PBAPP முன்கூட்டியே அறிவிக்குமாறு சுங்ஙாய் டுவா, LRA -விற்கு சென்றிருந்த போது செய்தியாளர் கூட்டத்தில் நேற்று அவர் கூறினார்.








