Mar 11, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இரு வாகனங்கள் மோதிக் கொண்டதில் மூவர் மரணம்

Share:

சிலாங்கூர், செரென்டா அருகில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர சாலை விபத்தில் மூவர் உயிரிழந்தனர். ஒருவர் கடுமையான காயங்களுக்கு ஆளாகினார்.

இச்சம்பவம் இன்று காலை 11.00 மணியளவில் ஜாலான் குவால குபு பரு – ரவாங் – புக்கிட் பெருந்தோங் சாலையில் செரென்டா கோல்ஃப் ரெசோர்ட் அருகில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து, ரவாங் தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தின் உதவியுடன் கோலகுபுபாரு நிலையத்தை சேர்ந்த 11 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவ்விலாகாவின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்த்தார் தெரிவித்தார்.

தொயோத்தா அவான்ஸா வாகனமும், பெரோடுவா அக்சியா காரும் மோதிக்கொண்ட இந்த விபத்தில் மூவர் உயிரிழந்தனர். தொயோத்தா அவான்ஸா வாகனத்தில் பயணம் செய்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் அவருடன் பயணித்த பெண் கடும் காயங்களுக்கு ஆளானார்.

பெரோடுவா அக்சியா காரில் பயணித்தவர்களில் ஒரு ஆணும், பெண்ணும் மரணம் அடைந்ததாக அஹ்மாட் முக்தார் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு