Dec 5, 2025
Thisaigal NewsYouTube
டி.எல்.பி விவகார​த்தில் தெளிவான விளக்கத்தை தருவீர்
தற்போதைய செய்திகள்

டி.எல்.பி விவகார​த்தில் தெளிவான விளக்கத்தை தருவீர்

Share:

டி.எல்.பி எனப்படும் இரட்டை​ மொழி பாடத்திட்டம் தொடர்பில் நிலவு குழப்பங்கள் குறித்து அரசாங்கம் தெளிவான வழிகாட்டலை வெளியிட வேண்டும் என்று முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் கேட்டுக்கொண்டார்.

டி.எல்.பி விவகாரத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் அறிவித்து இருந்தாலும் இந்த இரு மொழி பாடத்திட்டத்தில் மாநில கல்வி இலாகாவும், பள்ளி நிர்வாகமும் தெளிவான வழிகாட்டலை கொண்டிருக்காத காரணத்தினால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது என்று புத்ரா ஜெயா எம்.பி.யுமான ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.

டி.எல்.பி விவகாரத்தில் அரசாங்கத்தன் நிலைப்பாடு என்ன, அதன் கொள்கை யாது என்பது குறித்து கல்வி அமைச்சு தெளிவான வழிகாட்டலை வெளியிட்டு, அதனை பள்ளி நிர்வாகங்கள் பின்பற்றுவது உறுதி செய்யப்பட வேண்டும என்று அவர் வலியுறுத்தினார்.

ஒரு முன்னான் கல்வி அமைச்சர் என்ற முறையில் பெற்றோர்கள் பலர் தம்மை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு வருவதாக ராட்ஸி ஜிடின் குறிப்பிட்டார்.

கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியிலும் போதிப்பதற்கு வகை செய்யும் இந்த டி.எல்.பி திட்டம், கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் தெளிவான வழிகாட்டல்கள் இல்லாததால் பெற்றோர்கள் பல​ர் குழம்பிய நிலையில் இருக்கின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்