நவ.8-
தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரை மாநிலங்கள், சபாவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் 20 முதல் 40 விழுக்காடு கூடுதல் மழை பொழிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது எல் நினோ வானிலை வழக்கத்தைவிட குறைவான மழையை ஏற்படுத்தும். ஆனால், இந்த ஆண்டு La Nino ( லா நினோ ) நிகழ்வுடன் ஒரே நேரத்தில் ஏற்பட்டதால் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான Met Malaysia கூறுகிறது.








