Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கு - 170 மில்லியன் ரிங்கிட் பணம், 7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்

Share:

ஷா ஆலாம், மார்ச்.02-

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சம்பந்தப்பட்ட கையூட்டு, பணமோசடி விசாரணைகள் தொடர்பான பல இடங்களில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நடத்திய சோதனைகளின் விளைவாக, சுமார் 170 மில்லியன் ரிங்கிட் பணமும் கிட்டத்தட்ட 7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 16 கிலோ தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமரின் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய நான்கு மூத்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குடியிருப்புகளாகவும் 'பாதுகாப்பான வீடுகளாகவும்’ செயல்படுவதாக நம்பப்படும் மூன்று பிற வளாகங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைகளில், Baht, Riyal, Pound Sterling, Won, Euro, Swiss Franc, Yuan போன்ற பல்வேறு பன்னாட்டு நாணயங்களில் மாற்றுப் பணம் கண்டெடுக்கப்பட்டது.

இஸ்மாயில் சப்ரி நாட்டின் பிரதமராக இருந்தபோது விளம்பர நோக்கங்களுக்காக செய்யப்பட்ட செலவு தொடர்பாகவும் நிதி கையகப்படுத்துவது தொடர்பாகவும் விசாரணை கவனம் செலுத்துகிறது. SPRM சட்டம் 2009 , பணமோசடி தடுப்பு, பயங்கரவாத நிதி தடுப்பு, சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமானச் சட்டம் 2001 ஆகியவற்றின் கீழ் விசாரணை நடைபெறுகிறது என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்மாயில் சப்ரி 2024 டிசம்பர் 11 அன்று SPRM சட்டம் 2009 இன் பிரிவு 36(1) இன் கீழ் சொத்து அறிவிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அதனைத் தொடர்ந்து அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த பிப்ரவரி 10 அன்று செய்யப்பட்டது. முன்னாள் பிரதமர் கடந்த பிப்ரவரி 19 அன்று SPRM அலுவலகத்தில் சாட்சியம் அளித்தார். மேலும் விசாரணைக்கு உதவ மீண்டும் அழைக்கப்படலாம். இது தொடர்பாக, சுமார் 10 சாட்சிகள் அடையாளம் காணப்பட்டு விரைவில் அழைக்கப்படுவார்கள்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு