புத்ராஜெயாவில் உள்ள தமது அமைச்சில், இன்று காலையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், தமது சிறப்பு அதிகாரி கைதுசெய்யப்பட்டதை மனித வள அமைச்சர் வி.சிவக்குமார் உறுதிப்படுத்தினார்.
தமது அலுவலகத்தில் நடந்த இந்தக் கைது நடவடிக்கை குறித்து, தமக்கு தெரியப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கைது நடவடிக்கை, இன்னுமும் எஸ்.பி.ஆர்.எம். விசாரணையில் இருப்பதால், தற்போதைக்கு அது குறித்து கருத்துரைக்க இயலாது என்று சிவக்குமார் விளக்கினார்.
அதே வேளையில், அவசியம் ஏற்படும் பட்சத்தில், எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு ஒத்துழைக்க தாம் தயாராக இருப்பதாக சிவக்குமார் உறுதிக் கூறினார்.
கைது செய்யப்பட்டுள்ள சிவக்குமாரின் சிறப்பு அதிகாரி, பேராக் மாநில ஜ.செ.கா வின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் என்று கூறப்படுகிறது.
மனிதவள அமைச்சின் கீழ் அந்நியத் தொழிலாளர்கள் தருவிப்புத் தொடர்பில், தமக்கு வேண்டிய நிறுவனம் ஒன்றை நியமித்துக்கொண்டதாக கூறி அந்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம். தகவல்கள் கூறுகின்றன.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


