May 1, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சர் சிவக்குமார் உறுதிப்படுத்தினார்
தற்போதைய செய்திகள்

அமைச்சர் சிவக்குமார் உறுதிப்படுத்தினார்

Share:

புத்ராஜெயாவில் உள்ள தமது அமைச்சில், இன்று காலையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், தமது சிறப்பு அதிகாரி கைதுசெய்யப்பட்டதை மனித வள அமைச்சர் வி.சிவக்குமார் உறுதிப்படுத்தினார்.

தமது அலுவலகத்தில் நடந்த இந்தக் கைது நடவடிக்கை குறித்து, தமக்கு தெரியப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கைது நடவடிக்கை, இன்னுமும் எஸ்.பி.ஆர்.எம். விசாரணையில் இருப்பதால், தற்போதைக்கு அது குறித்து கருத்துரைக்க இயலாது என்று சிவக்குமார் விளக்கினார்.

அதே வேளையில், அவசியம் ஏற்படும் பட்சத்தில், எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு ஒத்துழைக்க தாம் தயாராக இருப்பதாக சிவக்குமார் உறுதிக் கூறினார்.

கைது செய்யப்பட்டுள்ள சிவக்குமாரின் சிறப்பு அதிகாரி, பேராக் மாநில ஜ.செ.கா வின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் என்று கூறப்படுகிறது.

மனிதவள அமைச்சின் கீழ் அந்நியத் தொழிலாளர்கள் தருவிப்புத் தொடர்பில், தமக்கு வேண்டிய நிறுவனம் ஒன்றை நியமித்துக்கொண்டதாக கூறி அந்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம். தகவல்கள் கூறுகின்றன.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி