Jan 19, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சர் சிவக்குமார் உறுதிப்படுத்தினார்
தற்போதைய செய்திகள்

அமைச்சர் சிவக்குமார் உறுதிப்படுத்தினார்

Share:

புத்ராஜெயாவில் உள்ள தமது அமைச்சில், இன்று காலையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், தமது சிறப்பு அதிகாரி கைதுசெய்யப்பட்டதை மனித வள அமைச்சர் வி.சிவக்குமார் உறுதிப்படுத்தினார்.

தமது அலுவலகத்தில் நடந்த இந்தக் கைது நடவடிக்கை குறித்து, தமக்கு தெரியப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கைது நடவடிக்கை, இன்னுமும் எஸ்.பி.ஆர்.எம். விசாரணையில் இருப்பதால், தற்போதைக்கு அது குறித்து கருத்துரைக்க இயலாது என்று சிவக்குமார் விளக்கினார்.

அதே வேளையில், அவசியம் ஏற்படும் பட்சத்தில், எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு ஒத்துழைக்க தாம் தயாராக இருப்பதாக சிவக்குமார் உறுதிக் கூறினார்.

கைது செய்யப்பட்டுள்ள சிவக்குமாரின் சிறப்பு அதிகாரி, பேராக் மாநில ஜ.செ.கா வின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் என்று கூறப்படுகிறது.

மனிதவள அமைச்சின் கீழ் அந்நியத் தொழிலாளர்கள் தருவிப்புத் தொடர்பில், தமக்கு வேண்டிய நிறுவனம் ஒன்றை நியமித்துக்கொண்டதாக கூறி அந்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம். தகவல்கள் கூறுகின்றன.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!