கோலாலம்பூர், ஜன -10
கெத்தும் பானத்தை விநியோகித்து, விற்கும் இரு வெவ்வேறு நடவடிக்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு நபர்களில் 6 போலீஸ்காரர்கள் அடங்குவர்.
கடந்த வியாழக்கிழமை ஜாலான் பூச்சோங்கில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் நான்கு காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக ப்ரிக்ஃபீல்ட், மாவட்ட போலீஸ் தலைவர் அமிஹிசாம் அப்துல் தெரிவித்தார்.
24 க்கும் 38க்கும் உட்பட்ட வயதுடைய போலீஸ்காரர்களிடமிருந்து 13,500 மில்லிமீட்டர் கெத்தும் பானம் தடுத்து வைக்கப்பட்டதுடன் 420 வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டதாக அமிஹிசாம் அப்துல் கூறினார்.
கெத்தும் இலைகளை செயல்முறை படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள், சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் உடன் 1,200 வெள்ளி ஆகியவை கைப்பற்றப்பட்டதாக நேற்று ஓர் அறிக்கையில் அறிவித்திருந்தார்.
இதுகுறித்து கோலாலம்பூர் போலீஸ் படை தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமிஹிசாம் அப்துல் அறிவித்தார்.








