கோலாலம்பூர், ஜூன் 25-
கடந்த ஆண்டு, Konsert Double Trouble 2 என்ற இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது தொடர்பாக Playmad Sdn Bhd நிறுவனத்தின் உரிமையாளரிடம் 30 ஆயிரம் வெள்ளி கையூட்டு பெற்றதாக அரசு நிறுவனத்தின் முன்னாள் உதவி மேலாளர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.
37 வயது நூர்பாதிலா முகமது இத்ரிஸ் என்ற அந்த முன்னாள் உதவி மேலாளர், நீதிபதி சுசானா ஹுசின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் 10 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 24(1) பிரிவின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் செப்டம்பர் 11 ஆம் தேதியில் மத்திய பிரதேசம் மற்றும் கோலாலம்பூர், தாமான் செத்தாப்பாக் இண்டா ஜெயா -வில் உள்ள ஒரு வங்கியில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.








