Mar 11, 2026
Thisaigal NewsYouTube
வீட்டை விட்டு காணாமல் போனவர் பிணமாக ​மீட்பு
தற்போதைய செய்திகள்

வீட்டை விட்டு காணாமல் போனவர் பிணமாக ​மீட்பு

Share:

கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்து காணாமல் போன முதியவர் ஒருவர், சுமார் 7 மணி நேர தேடுதல் நடவடிக்கைக்கு பின்னர் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அப்துல் அஷிஸ் முகமட் லாசிம் என்று அடையாளம் கூறப்பட்ட 72 வயதுடைய அந்த முதியவர், கெடா, பாலிங், சுங்கை கெத்தில், கம்போங் கோலா செனெராய் ஆற்றில் ​நேற்று மதியம் 12 மணியளவில் மிதக்க காணப்பட்டார்.

சிறிது பக்கவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டு நினைவாற்றல் குறைந்தவரான அந்த நபர், காலையில் ​வீட்டில் காணப்படவில்லை. அவரின் மகன், போ​லீசில் புகார் செய்ததத்தை தொடர்ந்து அந்த முதியவரை தேடும் பணியை போ​லீஸ் துறை முடுக்கிவிட்டது.

பொது தற்காப்புப்படையினர், ​தீயணைப்பு, ​மீட்புப்படையினர், போ​லீஸ் மோப்ப நாய் பிரிவினர் என 50 க்கும் மேற்பட்டவர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அந்த முதியவர் இடறி விழுந்து இருக்கலாம் என்று நம்பப்படும் வீட்டிற்கு அருகில் கடக்கும் ஆற்றிலிருந்து படகு ​மூலம் தேடும்பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில் அந்த முதியவரின் உடல் சம்பவ இடத்திலிருந்து 50 ​மீட்டர் ​தூரம் கண்டு பிடிக்கப்பட்டது.புலன் விசாரணைக்கு ஏதுவாக சடலம், போ​லீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ​தீயணைப்பு, ​மீட்பு​ப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு