Jan 20, 2026
Thisaigal NewsYouTube
2.5 பில்லியன் ரிங்கிட் பணமோசடி புகார்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஐஜேஎம் (IJM) நிறுவனத்தின் 2 உயர்மட்ட நிர்வாகிகள்
தற்போதைய செய்திகள்

2.5 பில்லியன் ரிங்கிட் பணமோசடி புகார்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஐஜேஎம் (IJM) நிறுவனத்தின் 2 உயர்மட்ட நிர்வாகிகள்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.20-

சுமார் 2.5 பில்லியன் ரிங்கிட் பணமோசடித் திட்டம் குறித்த புகார்களை விசாரிக்கும் வகையில், ஐஜேஎம் கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனத்தின் இரண்டு உயர்மட்ட நிர்வாகிகள் உட்பட மொத்தம் ஒன்பது பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணைக்கு அழைத்து வாக்குமூலம் பெற்றுள்ளது.

இன்று காலை 10 மணி முதல் புத்ராஜெயாவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் இந்த ஒன்பது பேரும் தங்களது வாக்குமூலங்களை வழங்கினர்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி, "இரண்டு ஐஜேஎம் நிர்வாகிகள் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கு குறித்து நாங்கள் முழுமையான விசாரணையை மேற்கொள்வோம்," என்று தெரிவித்தார்.

இது ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தொடர்பான விவகாரம் என்பதாலும், விசாரணை நேற்றுதான் தொடங்கப்பட்டது என்பதாலும், இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்க இயலாது. இது மிக ஆரம்பக் கட்டம். ஆவணங்களை ஆய்வு செய்ய கூடுதல் காலம் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு