புத்ராஜெயா, ஜன - 9
மலேசிய சபா பல்கலைக்கழத்தில் நீர் பிரச்னையை தவிர்ப்பதற்கு கடந்த ஆண்டு 3 மில்லியன் வெள்ளி மதிப்பிலான ஒதுக்கீடு தொடர்பான ஆய்வு அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டு கொண்டார்.
கடந்த ஆண்டு UMS-சிற்கு சென்றிருந்த போது நீர் வசதி இல்லாததால் குளிக்கமுடியவில்லை என்று சில மாணவர்கள் அளித்திருந்த புகாரை தொடர்ந்து ஓர் ஒதுக்கீட்டை அப்பல்கலைக்கழகத்திற்கு கொடுத்ததாக பிரதமர் அன்வார் கூறினார்.
உயர்க்கல்வி அமைச்சகம் 2 மில்லியன் வெள்ளி கூடுதலாக ஒதுக்கியிருப்பதாக நேற்று உயர்கல்வி அமைச்சர், டத்தோஶ்ரீ டாக்டர் சாம்ப்ரி அப்துல் காடிர் அறிவித்தார்.
இதுவரையில் தண்ணீர் பிரச்னை தீர்க்க எந்த அளவிற்கு முடிவுகள் எடுக்கபட்டுள்ளன என்பதை கண்டறிய விரிவான அறிக்கையை கேற்பதாக பிரதமர் தெரிவித்தார்.








