கடந்த ஜுலை 23 ஆம் தேதி டத்தோ செரி சலாஹுடின் அயூப் மறைவைத் தொடர்ந்து காலியாக இருந்து வரும் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் பதவி விரைவில் நிரப்பப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடி காட்டியுள்ளார்.
அந்தப் பதவி, யாரைக் கொண்டு நிரப்பப்படுவது என்பது குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அப்பதவி நிரப்பப்படும் என்றும் பிரதமர் உறுதி அளித்தார்.
அமானா கட்சியின் துணைத் தலைவரான சலாஹுடின் ஆயூப் வகித்து வந்த உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் பதவி, அவரின் அகால மரணத்தை தொடர்ந்த கடந்த இரண்டு மாத காலமாக நிரப்படாமல் இருந்து வருவது தொடர்பில் கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


