ஜொகூர் பாரு, ஜூன் 19-
ஜொகூர், ஜொகூர் பாரு-வில் செரி அலாம்-ம்மை நோக்கி செல்லும் பாசிர் குடாங் நெடுஞ்சாலையின் 19ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த விபத்தில், கடும் காயங்களுக்கு இலக்கான மோட்டார்சைக்கிளோட்டியான 19 வயது பதின்ம வயது பையன் உயிரிழந்தார்.
நேற்று அதிகாலை மணி 3.40 அளவில் அவர் செலுத்திய மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதல, அவர் சாலையின் வலதுபுறத்திற்கு தூக்கியெறியப்பட்டார்.
தலைப்பகுதியில் கடும் காயங்களுக்கு இலக்கான அவர், சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வேளை, இரவு மணி 9.30 அளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக, செரி அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பர்டென்டன் முகமது சோஹைமி இஷாக் தெரிவித்தார்.
1987ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ், அந்த விபத்து குறித்து விசாரிக்கப்படுவதாக, அவர் கூறினார்.








