இன்று மாலையில் பெய்த கனத்த மழையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. குறிப்பாக, கோலாலம்பூரில் பல்வேறு சாலைகளில் நீர் மட்டம் உயர்ந்து கரைபுரண்டோடியதால் வாகனமோட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
பன்டார் துன் ராசாக், செச்ராஸ், ஜாலான் புடு, ஜாலான் சங்காட் தம்பி, பன்டார் ஶ்ரீ பெர்மைசூரி போன்ற பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு நிலைமைய மோசமாக்கின. கோலாலம்பூர் மாநகரில் பிரதான பேருந்து சேவையை வழங்கி வரும் ரேபிட் கேஎல், பல சாலைகளில் தங்கள் நிறுவனத்தின் பேருந்து கடக்க முடியாமல் போக்குவரத்து நிலைக்குத்தியதாக தெரிவித்தது. இதில் ஜாலான் சான் சௌ லின் னும் அடங்கும்.
பேருந்துகள் சுங்ஙை பெசிலிருந்து ஜாலான் யு விற்கு வழித்தடம் மாற்றப்பட்டதாக அந்த அந்த நிறுவனம் தெரிவித்தது.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


