இன்று மாலையில் பெய்த கனத்த மழையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. குறிப்பாக, கோலாலம்பூரில் பல்வேறு சாலைகளில் நீர் மட்டம் உயர்ந்து கரைபுரண்டோடியதால் வாகனமோட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
பன்டார் துன் ராசாக், செச்ராஸ், ஜாலான் புடு, ஜாலான் சங்காட் தம்பி, பன்டார் ஶ்ரீ பெர்மைசூரி போன்ற பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு நிலைமைய மோசமாக்கின. கோலாலம்பூர் மாநகரில் பிரதான பேருந்து சேவையை வழங்கி வரும் ரேபிட் கேஎல், பல சாலைகளில் தங்கள் நிறுவனத்தின் பேருந்து கடக்க முடியாமல் போக்குவரத்து நிலைக்குத்தியதாக தெரிவித்தது. இதில் ஜாலான் சான் சௌ லின் னும் அடங்கும்.
பேருந்துகள் சுங்ஙை பெசிலிருந்து ஜாலான் யு விற்கு வழித்தடம் மாற்றப்பட்டதாக அந்த அந்த நிறுவனம் தெரிவித்தது.

Related News

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது


