Dec 4, 2025
Thisaigal NewsYouTube
துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

Share:

சுங்கை பட்டாணி, டிசம்பர்.04-

அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக ஓர் இந்தியப் பிரஜை, சுங்கை பட்டாணி செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

வெல்டிங் பணியாளரான 38 வயது முகமட் ஹசீன் என்ற அந்தப் பிரஜை நீதிபதி நபிஷா இப்ராஹிம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு இந்தி மொழியில் வாசிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 13 ஆம் தேதி மாலை 6.45 மணியளவில், பெடோங், ஜாலான் செமெலிங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையின் அலுவலகத்தில் Sig Sauer ரக கறுப்பு நிற கைத்துப்பாக்கியை வைத்திருந்ததாக அந்த இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டு சிறை மற்றும் 6 பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் 1971 ஆம் ஆண்டு சுடும் ஆயுதம் சட்டத்தின் கீழ் அந்த இந்தியப் பிரஜை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து  இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்