கொள்கலன் லோரி ஒன்று வேககட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று மாலை 5.24 மணியளவில் ரவாங், லாதார் நெடுங்சாலையின் 28.7 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
சுமார் 20 அடி பள்ளத்தாக்கில் விழுந்த அந்த 3 டன் லோரியிலிருந்து 50 வயது மதிக்கத்தக்க ஓட்டுநர், தூக்கி எறியப்பட்டு கடுமையான காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

Related News

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

விசாரணை ஆவணங்கள் சட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன

ஷம்சுல் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டதா, இல்லையா?

மத்திய கிழக்கிலிருந்து முதல் கட்டமாக மீட்கப்பட்டவர்கள் கே.எல்.ஐ.ஏ (KLIA) விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரை இறங்கினர்!

ஆடவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும்


