பினாங்கு செந்தமிழ் கலா நிலையம் ஏற்பாட்டில் “ வரலாறு கண்ட சகாப்தம், மூன்று தலைமுறையின் “ எனும் டத்தோ டாக்டர் ஞானபாஸ்கரனின் நூல் வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பினாங்கு, பிறை, ஜாலான் பாருவில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.
பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தலைமையில் நடைபெறவிருக்கும் இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு டாக்டர் டி. சின்னையா நாயுடு, டாக்டர் எஸ். ஜோபினா நாயுடு ஆகியோர் சிறப்பு வருகை புரியவிருக்கின்றனர்.
இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு இலக்கிய ஆர்வலகர்கள் மற்றும் பொது மக்கள் அழைக்கப்படுகின்றனர்.








