வரும் மே 10 தொடங்கி மே 11 வரை, இந்தோனேசியா, நூசா தெங்காரா தீமோர், லபுவான் பஜோவில் நடைபெறவிருக்கும் 42 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டு மலேசியாவைத் தலைமை தாங்குவார் என்று வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
ஆசியான் இளைஞர் பிரதிநிதிகள், ஆசியான் வர்த்தக ஆலோசனை மன்றம், 2025ஆம் ஆண்டுக்கு பிந்தைய ஆசியான் சமூக இலக்கு குறித்த உயர் அளவிலான ஊழியர் குழு, ஆகிய ஆசியான் தலைவர்களுக்குடனான கூட்டத்தில் பிரதமர் அன்வார் பங்கேற்பார் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், கிழக்கு ஆசியான், புரூணை, பிலிப்பைன்ஸ் வளர்ச்சி பகுதி உச்சநிலை மாநாட்டிற்கும், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து வளர்ச்சிக்கான உச்சநிலை மாநாட்டிற்கும் பிரதமர் தலைமையேற்கவிருப்பதாக அது தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஆசியான் நாடுகளுக்கிடையே நெருக்கமான ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்று அது குறிப்பிட்டது.

தற்போதைய செய்திகள்
42 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் மலேசியக் குழுவிற்கு பிரதமர் தலைமை தாங்குவார்
Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


