வரும் மே 10 தொடங்கி மே 11 வரை, இந்தோனேசியா, நூசா தெங்காரா தீமோர், லபுவான் பஜோவில் நடைபெறவிருக்கும் 42 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டு மலேசியாவைத் தலைமை தாங்குவார் என்று வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
ஆசியான் இளைஞர் பிரதிநிதிகள், ஆசியான் வர்த்தக ஆலோசனை மன்றம், 2025ஆம் ஆண்டுக்கு பிந்தைய ஆசியான் சமூக இலக்கு குறித்த உயர் அளவிலான ஊழியர் குழு, ஆகிய ஆசியான் தலைவர்களுக்குடனான கூட்டத்தில் பிரதமர் அன்வார் பங்கேற்பார் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், கிழக்கு ஆசியான், புரூணை, பிலிப்பைன்ஸ் வளர்ச்சி பகுதி உச்சநிலை மாநாட்டிற்கும், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து வளர்ச்சிக்கான உச்சநிலை மாநாட்டிற்கும் பிரதமர் தலைமையேற்கவிருப்பதாக அது தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஆசியான் நாடுகளுக்கிடையே நெருக்கமான ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்று அது குறிப்பிட்டது.

தற்போதைய செய்திகள்
42 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் மலேசியக் குழுவிற்கு பிரதமர் தலைமை தாங்குவார்
Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்


