வரும் மே 10 தொடங்கி மே 11 வரை, இந்தோனேசியா, நூசா தெங்காரா தீமோர், லபுவான் பஜோவில் நடைபெறவிருக்கும் 42 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டு மலேசியாவைத் தலைமை தாங்குவார் என்று வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
ஆசியான் இளைஞர் பிரதிநிதிகள், ஆசியான் வர்த்தக ஆலோசனை மன்றம், 2025ஆம் ஆண்டுக்கு பிந்தைய ஆசியான் சமூக இலக்கு குறித்த உயர் அளவிலான ஊழியர் குழு, ஆகிய ஆசியான் தலைவர்களுக்குடனான கூட்டத்தில் பிரதமர் அன்வார் பங்கேற்பார் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், கிழக்கு ஆசியான், புரூணை, பிலிப்பைன்ஸ் வளர்ச்சி பகுதி உச்சநிலை மாநாட்டிற்கும், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து வளர்ச்சிக்கான உச்சநிலை மாநாட்டிற்கும் பிரதமர் தலைமையேற்கவிருப்பதாக அது தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஆசியான் நாடுகளுக்கிடையே நெருக்கமான ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்று அது குறிப்பிட்டது.

தற்போதைய செய்திகள்
42 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் மலேசியக் குழுவிற்கு பிரதமர் தலைமை தாங்குவார்
Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


