Mar 23, 2026
Thisaigal NewsYouTube
அரசின் இரகசியத் தகவல்களை பகிர வேண்டாம் - அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சு எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

அரசின் இரகசியத் தகவல்களை பகிர வேண்டாம் - அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சு எச்சரிக்கை

Share:

அலோர் கஜா, ஜூலை 3-

உள்துறை அமைச்சின் கீழுள்ள அமலாக்க அதிகாரிகள் அரசின் இரகசியத் தகவல்களை பரப்ப வேண்டாம் என நினைவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யும் தரப்பினருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசரா எச்சரித்தார்.

எவ்வாறான விவகாரமாயினும், அது குறித்து உள்துறை அமைச்சின் அகப்பக்கத்தில் நம்பகமான தகவல்கள் வெளியிடப்படும் என அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் சிறுவன் ஜெய்ன் ரய்யான் அப்துல் மதியின் சடலத்தின் புகைப்படங்கள் பகிரப்பட்டது தொடர்பில், அந்தச் சிறுவனின் மரண விசாரணையை மேற்கொள்ளும் அதிகாரி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகாரளித்திருந்தார்.

Related News