Apr 1, 2026
Thisaigal NewsYouTube
மோசமான வானிலை: பல பகுதிகளில் மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தம்
தற்போதைய செய்திகள்

மோசமான வானிலை: பல பகுதிகளில் மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தம்

Share:

ஷா ஆலாம், ஏப்ரல்.11-

தற்போதைய மழை மற்றும் வெள்ள நிலைமை காரணமாக ஷா ஆலாமைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெனாகா நேஷனல் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

உள்ளூர் பயனீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்காக இக்கேடா மற்றும் நிப்பான் ஸ்டீல் மின்சார துணை மின்நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெனாகா நேஷனல் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மின்சார சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், பிரதான சுவிட்சை அடைத்து வைக்கவும் கேட்டு கொள்ளப்படுகிறது. பொதுமக்களின் பொறுமையை பெரிதும் எதிர்பார்ப்பதாக தெனாகா நேஷனல் பெர்ஹாட் முகநூலில் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் ஷா ஆலாமில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில் எச்.எல் கிடங்கிற்கு முன்னால் உள்ள பிரதான சாலை, செக்‌ஷன் 23, ஸ்ரீ மூடா உட்பட, பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஷா ஆலம் தவிர, கிள்ளான், பூச்சோங் மற்றும் உலு லங்காட் ஆகிய பகுதிகளிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Related News

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்