கணவனால் கடும் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள், அந்தச் சித்ரவதையிலிருந்து மீளவும், தங்களைத் தற்காத்துக்கொள்ளவும், பிரத்தியேக அடைக்கலம் கோருவதற்கும் ஈ.பி.ஒ. என்ற அழைக்கப்படும் அவசர பாதுகாப்பு உத்தரவைப் பெறுவதற்கு உரிமைப்பெற்றுள்ளனர் என்று மகளிர் நலன் அமைப்பு தெரிவித்துள்ளது.
அரசாங்கம் மற்றும் அரசாங்க சார்பற்ற அமைப்புகளினால் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்தியேக அடைக்கல இல்லங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு, உரிய நிவாரணம் அளிப்பதற்கு இந்த ஈ.பி.ஒ. உத்தரவு வகை செய்யும் என்று அஸ்வா எனப்படும் மலேசிய மகளிர் நலன் காக்கும் அமைப்பின் தலைவர் வான் அஸாலீனா வான் அட்னான் தெரிவித்துள்ளார்.
அடைக்கலம் கோருவதற்கு இப்படியொரு உத்தரவு, நடைமுறையில் உள்ளது என்பதை பெரும்பானலான பெண்கள் அறிந்திருக்கவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். கணவனின் சித்ரவதைக்கு ஆளாகும் பெண்கள், இந்த ஈ.பி.ஒ. உத்தரவை பெறுவது மூலம் அவர்கள் உடனடியாக மீட்கப்படுவர்.
அத்துடன் அவர்கள் 7 நாட்களுக்கு இந்தப் பிரத்தியேக இல்லத்தில் தங்க வைப்பர். அதுவரை அவர்களைக் கணவன்மார் நெருங்காமல் பாதுகாப்பு அளிக்கப்படும். அதன் பின்னர் அவர்களுக்கு உரிய வழிகாட்டல் மற்றும் தேவையான நல்லுரைகள் வழங்கப்படும் என்று வான் அஸாலீனா விவரித்தார். பாதிக்கப்பட்ட பெண்கள், நேரடி அழைப்புக்கு 15999 அல்லது புலனத்தில் 019-2615999 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று வான் அஸாலீனா விளக்கினார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


