May 1, 2026
Thisaigal NewsYouTube
கணவனால் துன்புறுத்தப்படும் பெண்கள், அடைக்கலம் கோர முடியும்
தற்போதைய செய்திகள்

கணவனால் துன்புறுத்தப்படும் பெண்கள், அடைக்கலம் கோர முடியும்

Share:

கணவனால் கடும் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள், அந்தச் சித்ரவதையிலிருந்து மீளவும், தங்களைத் தற்காத்துக்கொள்ளவும், பிரத்தியேக அடைக்கலம் கோருவதற்கும் ஈ.பி.ஒ. என்ற அழைக்கப்படும் அவசர பாதுகாப்பு உத்தரவைப் பெறுவதற்கு உரிமைப்பெற்​றுள்ளனர் என்று மகளிர் நலன் அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கம் மற்றும் அரசாங்க சார்பற்ற அமைப்புகளினால் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்தியேக அடைக்கல இல்லங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு, உரிய நிவாரணம் அளிப்பதற்கு இந்த ஈ.பி.ஒ. உத்தரவு வகை செய்யும் என்று அஸ்வா எனப்படும் மலேசிய மகளிர் நலன் காக்கும் அமைப்பின் தலைவர் வான் அஸாலீனா வான் அட்னான் தெரிவித்துள்ளார்.

அடைக்கலம் கோருவதற்கு இப்படி​யொரு உத்தரவு, நடைமுறையில் உள்ளது என்பதை பெரும்பானலான பெண்கள் அறிந்திருக்கவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். கணவனின் சித்ரவதைக்கு ஆளாகும் பெண்கள், இந்த ஈ.பி.ஒ. உத்தரவை பெறுவது மூலம் அவர்கள் உடனடியாக ​மீட்கப்படுவர்.

அத்துடன் அவர்கள் 7 நாட்களுக்கு இந்தப் பிரத்தியேக இல்லத்தில் தங்க வைப்பர். அதுவரை அவர்களைக் கணவன்மார் நெருங்காமல் பாதுகாப்பு அளிக்கப்படும். அதன் பின்னர் அவர்களுக்கு உரிய வழிகாட்டல் மற்றும் தேவையான நல்லுரைகள் வழங்கப்படும் என்று வான் அஸாலீனா விவரித்தார். பாதிக்கப்பட்ட பெண்கள், நேரடி அழைப்புக்கு 15999 அல்லது புலனத்தில் 019-2615999 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று வான் அஸாலீனா விளக்கினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி