கிள்ளான், ஜூலை.25-
நாட்டில் பல்வேறு பகுதிகளில் புகைமூட்டம் அதிகரித்துள்ள வேளையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி கிள்ளான், ஜோஹான் செத்தியாவில் ஆரோக்கியமற்ற காற்று சூழல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் காற்று மாசுபாடு குறியீட்டின் அளவு 151 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் இலாகா தெரிவித்துள்ளது.








