Mar 17, 2026
Thisaigal NewsYouTube
தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பாலியல் துன்புறுத்தலா? – புகார்கள் ஏதும் வரவில்லை என்கிறது உள்துறை அமைச்சு
தற்போதைய செய்திகள்

தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பாலியல் துன்புறுத்தலா? – புகார்கள் ஏதும் வரவில்லை என்கிறது உள்துறை அமைச்சு

Share:

கோலாலம்பூர், நவம்பர்.12-

தத்தெடுக்கும் முறையைத் தவறாகப் பயன்படுத்தி குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் கும்பல் தொடர்பாக, தேசியப் பதிவிலாகாவிற்கு இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ புகாரும் வரவில்லை என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அது போன்ற குற்றச்சாட்டுகளைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் அமைச்சு, இந்த விவகாரத்தில் எந்தவித சமரசமும் காட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

தத்தெடுப்பு பதிவுச் சட்டம் 1952-ன் படி, தற்போது நடைமுறையில் உள்ள தத்தெடுக்கும் முறையானது, குறைந்தபட்ச பராமரிப்புக் காலம், மரபு வழிப் பெற்றோரின் ஒப்புதல், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட நிபந்தனைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டது என்றும் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய நடைமுறைகள் போதுமானதாகக் கருதினாலும் கூட, தத்தெடுப்புப் பதிவுச் சட்டம் 1952 மற்றும் தத்தெடுப்புச் சட்டம் 1952 இரண்டையும் திருத்தும் நோக்கத்துடன், மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு