Mar 18, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சரவை தொடர்புடைய 80-க்கும் மேற்பட்ட ஊழல் விசாரணை ஆவணங்களை எஸ்பிஆர்எம் திறந்துள்ளது - அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்!
தற்போதைய செய்திகள்

அமைச்சரவை தொடர்புடைய 80-க்கும் மேற்பட்ட ஊழல் விசாரணை ஆவணங்களை எஸ்பிஆர்எம் திறந்துள்ளது - அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.05-

பல்வேறு அமைச்சுகளை உள்ளடக்கிய ஊழல் வழக்குகள் தொடர்பாக 80-க்கும் மேற்பட்ட விசாரணை ஆவணங்களை எஸ்பிஆர்எம் திறந்துள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் 2025 செப்டம்பர் 26-ஆம் தேதி வரையில், மொத்தம் 87 விசாரணை ஆவணங்கள், எஸ்பிஆர்எம் மூலம் திறக்கப்பட்டுள்ளதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

அவற்றில், மொத்தம், 28 அமைச்சுகளில், உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சில் அதிகபட்சமாக 14 வழக்குகளும், உள்துறை அமைச்சில் 11 வழக்குகளும், கல்வி அமைச்சு மற்றும் நிதி அமைச்சில் தலா 8 வழக்குகளும் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உலு திரங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரோசோல் வாஹிட், அரசாங்க அதிகாரிகள் மற்றும் அமைச்சரவை தொடர்புடைய ஊழல் வழக்குகளின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அஸாலினா ஒத்மான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை, டிஜிட்டல், பொது பணித்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்ட 8 துறைகளில் ஊழல் வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்