பஹாங், காராக் புகிட் திங்கி நெடுஞ்சாலையின், 43 ஆவது கிலோமீட்டரில், மணல் ஏற்றப்பட்ட த்ரெலர் லோரியில் சிக்கி, சுமார் 10 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் 33 வயதுடைய, மொஹம்மாட் ஹஸ்ருல் அப்துல் ஹாலிம் என்ற அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக பகாங் மாநில தீயணைப்பு, மீட்புத் துறையின் அதிகாரி சுல்ஃபட்லி ஸகாரியா தெரிவித்தார்.
இன்று அதிகாலை 3.45 மணியளவில் கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, 3 தீயணைப்பு வண்டிகளுடன் அவ்விடத்திற்கு விரைந்த 15 வீரர்கள், சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி அந்நபரை மீட்கும் பணியில் முழு வீச்சில் ஈடுப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் சுல்ஃபட்லி ஸகாரியா இதனை தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


