2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடர்ந்து தலைநகரை சுற்றி 3.06 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன.
2023 ஆம் ஆண்டில் 2.98 டன் குப்பைகள் மட்டுமே இந்நாளில் சேகரிக்கப்பட்டதாகவும் இவை கடந்த ஆண்டினை காட்டிலும் அதிகளவில் இருப்பதாக அலாம் ஃப்லோரா மேலாளர் அனுவார் முஹமாட் ஷாஹ் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் 700,000 டன் குப்பைகள் கடந்த ஆண்டில் மட்டுமே சேகரிக்கபட்டன.
நாளுக்கு 1,900 முதல் 2,000 குப்பைகள் எடுக்கப்பட்டதாக அனுவார் முஹமாட் கூறினார்.
பொதுமக்கள் இதை கருத்தில் கொள்வதோடு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுக்கும் இருக்கின்றது என்பதை உணர வேண்டும் என்று அனுவார் முஹமாட் கேட்டுக் கொண்டார்.








