வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் மாநில தேர்தலில் கெடா, லூனாஸ் சட்டமன்றத் தொகுதியில் ஒரு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சி. அரிசந்திரன் மூத்தக் குடிமக்களின் வசதிக்காக வாக்களிப்பு தினத்தன்று சக்கர நாற்காலி போன்ற வசதிகளை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்துள்ளார்.
கடந்த காலங்களில் வாக்களிப்புத் தினத்தன்று மூத்த குடிமக்கள் குறிப்பாக நடக்க இயலாதவர்கள், நடக்க சிரமப்படுகின்றவர்களுக்கு சக்கர நாற்காலி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படாததால் அவர்கள் வாக்கு மையங்களுக்கு செல்வதிலும் வாக்களிப்பதிலும் சிரமங்களை எதிர் நோக்கியதை கண்கூடாக பார்க்க முடிந்ததாக சுயேட்சை வேட்பாளர் அரிசந்திரன் தெரிவித்தார்.
நேற்று பாயா பெசார் வட்டாரத்தில் பிரச்சாரத்திற்காக சென்றிருந்த அரிசந்திரனிடம் மூத்த குடிமக்கள் வாக்களிப்பு தினத்தன்று தாங்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்னைகளை முன்வைத்ததைத் தொடர்ந்து லூனாஸ் தொகுதியில் இத்தகைய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அரிசந்திரன் உறுதியளித்தார்.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு


