வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் மாநில தேர்தலில் கெடா, லூனாஸ் சட்டமன்றத் தொகுதியில் ஒரு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சி. அரிசந்திரன் மூத்தக் குடிமக்களின் வசதிக்காக வாக்களிப்பு தினத்தன்று சக்கர நாற்காலி போன்ற வசதிகளை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்துள்ளார்.
கடந்த காலங்களில் வாக்களிப்புத் தினத்தன்று மூத்த குடிமக்கள் குறிப்பாக நடக்க இயலாதவர்கள், நடக்க சிரமப்படுகின்றவர்களுக்கு சக்கர நாற்காலி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படாததால் அவர்கள் வாக்கு மையங்களுக்கு செல்வதிலும் வாக்களிப்பதிலும் சிரமங்களை எதிர் நோக்கியதை கண்கூடாக பார்க்க முடிந்ததாக சுயேட்சை வேட்பாளர் அரிசந்திரன் தெரிவித்தார்.
நேற்று பாயா பெசார் வட்டாரத்தில் பிரச்சாரத்திற்காக சென்றிருந்த அரிசந்திரனிடம் மூத்த குடிமக்கள் வாக்களிப்பு தினத்தன்று தாங்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்னைகளை முன்வைத்ததைத் தொடர்ந்து லூனாஸ் தொகுதியில் இத்தகைய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அரிசந்திரன் உறுதியளித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


