Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இன்று வரை ராஹ்மாஹ் பொருட்கள் விற்கும் திட்டம்
தற்போதைய செய்திகள்

இன்று வரை ராஹ்மாஹ் பொருட்கள் விற்கும் திட்டம்

Share:

மடானி மலேசியா ராஹ்மாஹ் திட்டத்தின் கீழ் பொருள் விற்பனையின் வாயிலாக வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றவர்களும் பி40 தரப்பைச் சேர்ந்த குடும்பங்களும் இன்று வரை பயன் அடைந்து வருவதாக கூலிம் சட்டமன்றத்திற்கு போட்டியிடும் மக்கள் நீதி கட்சியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அவாங் தே லியாங் ஓங் தெரிவித்துள்ளார்.

சமையல் பொருட்கள் உட்பட சாமானிய மக்களின் அன்றாடத் தேவைக்கான அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்வதில் மடானி மலேசியாவின் ராஹ்மாஹ் திட்டம் கருணை சார்ந்த பங்களிப்பை வழங்கி வருவதாக அவாங் தே லியாங் ஓங் கூறினார்.

கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மிக குறைந்த விலையில் ஏற்ப்படுத்தப்பட்டுள்ள இந்த ராஹ்மாஹ் பொருள் விற்பனை திட்டம், தற்போது கூலிம் வட்டாரத்தில் தாமான் கெனாரி மற்றும் தாமான் ஜாத்தி ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவையின் வாயிலாக ஏறக்குறை 700 க்கும் மேற்பட்ட மக்கள் பயன் பெற்று வருவதாக அவாங் தே லியாங் ஓங் குறிப்பிட்டார்.

உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் இந்த ராஹ்மாஹ் ராஹ்மாஹ் திட்டம் மக்களின் பொருளாதார சுமையை குறைக்கும் பக்காத்தான் ஹராப்பானின் மக்கள் நலம் சார்ந்த வியூகமாகும் என்று அவாங் தே லியாங் ஓங் புகழாரம் சூட்டினார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்