Aug 7, 2026
Thisaigal NewsYouTube
இன்று வரை ராஹ்மாஹ் பொருட்கள் விற்கும் திட்டம்
தற்போதைய செய்திகள்

இன்று வரை ராஹ்மாஹ் பொருட்கள் விற்கும் திட்டம்

Share:

மடானி மலேசியா ராஹ்மாஹ் திட்டத்தின் கீழ் பொருள் விற்பனையின் வாயிலாக வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றவர்களும் பி40 தரப்பைச் சேர்ந்த குடும்பங்களும் இன்று வரை பயன் அடைந்து வருவதாக கூலிம் சட்டமன்றத்திற்கு போட்டியிடும் மக்கள் நீதி கட்சியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அவாங் தே லியாங் ஓங் தெரிவித்துள்ளார்.

சமையல் பொருட்கள் உட்பட சாமானிய மக்களின் அன்றாடத் தேவைக்கான அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்வதில் மடானி மலேசியாவின் ராஹ்மாஹ் திட்டம் கருணை சார்ந்த பங்களிப்பை வழங்கி வருவதாக அவாங் தே லியாங் ஓங் கூறினார்.

கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மிக குறைந்த விலையில் ஏற்ப்படுத்தப்பட்டுள்ள இந்த ராஹ்மாஹ் பொருள் விற்பனை திட்டம், தற்போது கூலிம் வட்டாரத்தில் தாமான் கெனாரி மற்றும் தாமான் ஜாத்தி ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவையின் வாயிலாக ஏறக்குறை 700 க்கும் மேற்பட்ட மக்கள் பயன் பெற்று வருவதாக அவாங் தே லியாங் ஓங் குறிப்பிட்டார்.

உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் இந்த ராஹ்மாஹ் ராஹ்மாஹ் திட்டம் மக்களின் பொருளாதார சுமையை குறைக்கும் பக்காத்தான் ஹராப்பானின் மக்கள் நலம் சார்ந்த வியூகமாகும் என்று அவாங் தே லியாங் ஓங் புகழாரம் சூட்டினார்.

Related News

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்