Aug 11, 2026
Thisaigal NewsYouTube
கம்போடிய ஆடவருக்கு 40 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

கம்போடிய ஆடவருக்கு 40 ஆண்டு சிறை

Share:

புத்ராஜெயா, ஏப்ரல்.21-

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, சிலாங்கூரில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் இரண்டு பெண்களையும், இரண்டு சிறார்களையும் கொலை செய்த குற்றத்திற்காக கம்போடிய ஆடவருக்கு கூட்டரசு நீதிமன்றம் இன்று 40 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

அந்த நபருக்கு அப்பீல் நீதிமன்றம் விதித்த 60 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்த கூட்டரசு நீதிமன்றம், அந்த தண்டனையை 40 ஆண்டுகளாகக் குறைத்தது.

40 வயதுடைய உசுஃப் மல்தி என்ற அந்த கம்போடியப் பிரஜைக்குக் குறைக்கப்பட்டுள்ள 40 ஆண்டு கால சிறைத் தண்டனை, அவர் பிடிப்பட்ட தினமாக கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற கூட்டரசு நீதிபதி ரொட்ஸாரியா புஜாங் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

அந்த ஆடவர், கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி இரவு 7.25 மணியளவில் கோலலங்காட், Telok Panglima Garang, Kampung Sijangkang- கில் நான்கு கொலைகளை செய்ததாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது.

Related News

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு