Mar 15, 2026
Thisaigal NewsYouTube
ஜொகூரில் மூன்று பள்ளிகள் மூடப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

ஜொகூரில் மூன்று பள்ளிகள் மூடப்பட்டுள்ளன

Share:

ஜொகூர் பாரு, ஜன - 8

ஜொகூரில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இன்று முதல் மூன்று பள்ளிகள் மூடபட்டுள்ளதாக ஜொகூர், கல்வி, தகவல், மற்றும் தொடர்பியல் தலைவர் நோர்லிசா நோ தெரிவித்தார்.

மூன்று தேசிய பள்ளிகளான கம்போங் மஜு ஜெயா,புக்கிட் முத்தியாரா, சுங்ஙாய் திராம் ஆகிய மூன்று பள்ளிகள் மூடப்படுவதுடன் இதுவரையில் எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படவில்லை என்றும் நோர்லிசா நோ குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி 2 ஆம் தேதி கல்வி அமைச்சு ஃபட்லினா சிடெக் வெளியிட்டிருந்த அறிக்கையின்படி, மலேசிய கல்வி அமைச்சகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு சாதாரண உடைகளை அணிந்து வருவதை அனுமதித்திருப்பதாக நோர்லிசா நோ விளக்கினார்.

ஜொகூரில் 48,276 எஸ்பிஎம் மாணவர்களும் 8,831 எஸ்திபிஎம் மாணவர்களும் இவ்வாண்டு தேர்வு எழுதவுள்ளதாக அவர் அறிவித்தார்.

Related News