Feb 5, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதக் குடியேறிகள் 24 பேர் கைது
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதக் குடியேறிகள் 24 பேர் கைது

Share:

கோலா லங்காட், பிப்ரவரி.05-

சிலாங்கூர், கோலா லங்காட், தெலுக் பாங்லிமா காராங்கில் உள்ள செம்பனைத் தோட்டப் பகுதியில் தனியாகக் காணப்பட்ட கிடங்கு ஒன்றில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையிட்டதில் 24 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கிடங்கு சீனாவிலிருந்து வரும் பொருட்களைப் பதப்படுத்துவதற்கும், பேக்கேஜிங் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆன்லைன் செயலிகள் மூலம் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இங்கிருந்துதான் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அதிகாரிகளின் பார்வையில் படாமல் இருப்பதற்காக, வணிகப் பெயர்ப் பலகைகள் ஏதுமின்றி, தோட்டப் பகுதியின் உட்புறத்தில் இந்தத் தொழில் ரகசியமாக நடத்தப்பட்டுள்ளது.

நேற்று காலை 10.55 மணியளவில் நடைபெற்ற இந்தச் சோதனையில் சீனப் பிரஜைகளான இரண்டு ஆடவர்கள், 9 வங்காளதேசிகள், 2 இந்தியப் பிரஜைகள், 2 மியன்மார் பிரஜைகள், ஒரு கம்போடியா பிரஜை மற்றம் 8 பெண்கள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.

Related News

தம்பின்: பாதாளச் சாக்கடை குழி விபத்தில் பலியான இளைஞரின் குடும்பத்திற்கு எஸ். வீரப்பன் ஆறுதல்

தம்பின்: பாதாளச் சாக்கடை குழி விபத்தில் பலியான இளைஞரின் குடும்பத்திற்கு எஸ். வீரப்பன் ஆறுதல்

இந்து ஆலயங்களுக்கு எதிரான பேரணியைத் தடுக்க இந்திய எம்பிக்கள் வலியுறுத்தல்

இந்து ஆலயங்களுக்கு எதிரான பேரணியைத் தடுக்க இந்திய எம்பிக்கள் வலியுறுத்தல்

அனைத்து மலேசியர்களுக்கும் 100 ரிங்கிட் சாரா (SARA) நிதி உதவி: பிப்ரவரி 9 முதல் வழங்கப்படும்

அனைத்து மலேசியர்களுக்கும் 100 ரிங்கிட் சாரா (SARA) நிதி உதவி: பிப்ரவரி 9 முதல் வழங்கப்படும்

பயணிகள் இனி My50-இல் சேமிப்பைத் தெரிந்து கொள்ளலாம்: பயன்பாட்டை அதிகரிக்க புதிய வசதி

பயணிகள் இனி My50-இல் சேமிப்பைத் தெரிந்து கொள்ளலாம்: பயன்பாட்டை அதிகரிக்க புதிய வசதி

ஊடகச் சுதந்திரத்திற்காக 'மலேசிய ஊடக மன்றம்' வலுப்படுத்தப்பட வேண்டும்: பிரதமர் விருப்பம்

ஊடகச் சுதந்திரத்திற்காக 'மலேசிய ஊடக மன்றம்' வலுப்படுத்தப்பட வேண்டும்: பிரதமர் விருப்பம்

பள்ளி மாணவனுக்குப் பாலியல் தொல்லை: பேருந்து ஓட்டுநருக்கு  7 நாட்கள் தடுப்புக் காவல்

பள்ளி மாணவனுக்குப் பாலியல் தொல்லை: பேருந்து ஓட்டுநருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்