தமது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் புரிவதற்கு தமது கணவருக்கு உடந்தையாக இருந்ததாக மாது ஒருவர் மூவார், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
41 வயதுடைய அந்த மாது கடந்த 2021 ஆம் ஆண்டு மூவாரில் உள்ள தமது வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தனது வளர்ப்புத் தந்தையான அந்த நபர், 17 வயது பெண்ணிடமிருந்து தீய சக்தியை வெளியேற்றுவதாக கூறி, பாலியல் பலாத்காரம் புரிந்த போது, அந்த இளம் பெண்ணின் தாயாரான அந்த மாது, கணவனின் வக்கிரச் செயலுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
தனக்கு எதிராக குற்றத்தை அந்த மாது ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து வரும் ஜனவரி 30 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








