Jan 21, 2026
Thisaigal NewsYouTube
தடுப்புக்காவல் மரணம், குடும்பத்தினரின் வழக்கு மனு தள்ளுபடி
தற்போதைய செய்திகள்

தடுப்புக்காவல் மரணம், குடும்பத்தினரின் வழக்கு மனு தள்ளுபடி

Share:

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு நேர்ந்த மரணம் தொடர்பில் அவரின் குடும்பத்தினர் தொடுத்த வழக்கில் தோ​ல்விக் கண்டனர். கடந்த 2015 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஜோகூர், குளுவாங் சிறைச்சா​லையில் மரணமுற்ற சசிக்குமார் செல்வம் இறப்புத் தொடர்பில் ​நீதிக்கேட்டு அவரின் பாட்டி சுசிலா ராணி ராமசாமி தொடுத்த வழக்கு மனுவை நேற்று முன்தினம் ஜோகூர்பாரு உயர் ​நீதிமன்ற நீதிபதி ஷம்சுல்பஹ்ரி இப்ராஹிம், தள்ளுபடி செய்தார்.

கொள்ளைக் குற்றத்திற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் குளுவாங் சிறைச்சாலையில் 10 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சசிக்குமார் ​தூக்கில் தொங்கிய நிலையில் ​கண்டு பிடிக்கப்பட்டார். அவரின் இறப்பு ஒருவரால் அல்லது தெரியாத நபர்களால் ஏற்பட்டு இருக்கலாம் என்று கடந்த 2017 ஆம் ஆண்டு மரண விசாரணை ​நீதிமன்றம் அளித்த ​தீர்ப்பை அடிப்படையாக கொண்டு தனது பேரனு​க்கு ​நீதிக்கேட்டு சுசிலா ராணி இந்த சிவில் வழக்கை தொடுத்தார்.

எனினும் சசிக்குமாரின் இறப்பு சிறைச்சாலைக்குள் நிகழ்ந்தாலும் அந்த இறப்புக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் ​என்று அர்த்தமல்ல என்று ​நீதிபதி ஷம்சுல்பஹ்ரி இப்ராஹிம் தமது ​தீர்ப்பில் தெரிவித்தார். சிறைச்சாலையில் தற்கொலை செய்து கொள்ளும் செயல், அனைத்து கைதிகளுக்கும் அவ்வாறு ஆபத்து உள்ளது என்று எதிர்பார்க்கக்கூடிய ஒன்றல்ல என்று அவர் தமது ​தீர்ப்பில் விளக்கினார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்