எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு நேர்ந்த மரணம் தொடர்பில் அவரின் குடும்பத்தினர் தொடுத்த வழக்கில் தோல்விக் கண்டனர். கடந்த 2015 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஜோகூர், குளுவாங் சிறைச்சாலையில் மரணமுற்ற சசிக்குமார் செல்வம் இறப்புத் தொடர்பில் நீதிக்கேட்டு அவரின் பாட்டி சுசிலா ராணி ராமசாமி தொடுத்த வழக்கு மனுவை நேற்று முன்தினம் ஜோகூர்பாரு உயர் நீதிமன்ற நீதிபதி ஷம்சுல்பஹ்ரி இப்ராஹிம், தள்ளுபடி செய்தார்.
கொள்ளைக் குற்றத்திற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் குளுவாங் சிறைச்சாலையில் 10 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சசிக்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார். அவரின் இறப்பு ஒருவரால் அல்லது தெரியாத நபர்களால் ஏற்பட்டு இருக்கலாம் என்று கடந்த 2017 ஆம் ஆண்டு மரண விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடிப்படையாக கொண்டு தனது பேரனுக்கு நீதிக்கேட்டு சுசிலா ராணி இந்த சிவில் வழக்கை தொடுத்தார்.
எனினும் சசிக்குமாரின் இறப்பு சிறைச்சாலைக்குள் நிகழ்ந்தாலும் அந்த இறப்புக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று அர்த்தமல்ல என்று நீதிபதி ஷம்சுல்பஹ்ரி இப்ராஹிம் தமது தீர்ப்பில் தெரிவித்தார். சிறைச்சாலையில் தற்கொலை செய்து கொள்ளும் செயல், அனைத்து கைதிகளுக்கும் அவ்வாறு ஆபத்து உள்ளது என்று எதிர்பார்க்கக்கூடிய ஒன்றல்ல என்று அவர் தமது தீர்ப்பில் விளக்கினார்.

Related News

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு


