காஜாங் ,செப்டம்பர் 13-
சமயத்தை தவறாக பயன்படுத்துவது, சிறார்களை துன்புறுத்துவது போன்ற செயல்கள் மிகப்பெரிய குற்றங்களாகும். இவை விரைந்து கையாளப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
கடந்த புதன்கிழமை சிலாங்கூரிலும், நெகிரி செம்பிலானிலும் உள்ள சமூக நல இல்லங்களில் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் அங்கு தவறாக நடத்தப்பட்டதாக கூறப்படும் 402 பிள்ளைகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.








