கடந்த ஆண்டு தனது 12 மற்றும் 9 வயதுடைய இரண்டு பேத்திகளுக்கு பாலியல் தொல்லை மற்றும் பலாத்காரம் செய்த 67 வயது முதியவருக்கு முவார் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 33 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 14 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தன் மீதான ஐந்து குற்றச்சாட்டுகளையும் அந்த முதியவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிபதி கைரி ஹாரோன் இந்தத் தண்டனையை வழங்கினார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தாத்தா என்ற முறையில், நம்பிக்கைக்குரிய உறவில் இருந்துகொண்டே இக்கொடூரக் குற்றத்தைச் செய்ததால் இவருக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்டனை காலம் முடிந்த பிறகு மூன்று ஆண்டுகளுக்கு அவர் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








