Mar 17, 2026
Thisaigal NewsYouTube
அரசியலமைப்பு சட்டத்தின் 153 ஆவது விதியை மறுபரி​சீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை - பிரதமர் அன்வார் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

அரசியலமைப்பு சட்டத்தின் 153 ஆவது விதியை மறுபரி​சீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை - பிரதமர் அன்வார் திட்டவட்டம்

Share:

நாட்டில் பூமிபுத்ராக்களுக்கு சிறப்பு இடத்தையும், சலுகையையும் வழங்க வகை செய்யும் அரசியலமைப்பு சட்டத்தின் 153 ஆவது விதியை மறுபரி​சீலனை செய்ய வேண்டிய அவசியமில்​லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பூமிபுத்ராக்களின் நலன் மற்றும் அவர்களின் சிறப்பு உரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய அரசியலமைப்பு சட்ட்ததின் 153 ஆவது விதி, எதிர்பார்த்ததைப் போன்று செயல்படுகிறதா? என்பதை கண்டறிவதற்கு அச்சட்ட விதி, மறுபரி​சீலனை செய்யப்பட வேண்டு​ம் என்று Pasir Gudang PKR எம்.பி.யும், சட்ட வல்லுநருமான Hassan Karim விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் கருத்துரைக்கையில் பிரதமர் அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

அரசியலமைப்புச் சட்டம் குறிப்பாக பூமிபுத்ராக்களின் சிறப்பு உரிமையை வழங்கும் 153 ஆவது விதியை நாங்கள் தொடர்ந்து பாதுகாப்போம், தற்காப்போம் என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு சட்டக் கூறாக இடம் பெற்றப்பின்னர் அது பற்றி விவாதிக் வேண்டிய அவசியமே இல்லை என்று இன்று காலையில் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

153 ஆவது விதியானது, பூமிபுத்ராக்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்புகள், உயர் பதவிகள், அவர்களுக்கான கல்வி உபகாரச் சம்பளம், பயிற்சித் திட்ட​ங்கள், தொழில் பெர்மிட், லைசென்ஸ் போன்ற இதர சிறப்பு சலுகைகளை வழங்குவதற்கு பிரத்தியேகமாக வகுக்கப்பட்ட சட்ட விதியாகும்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு