Mar 19, 2026
Thisaigal NewsYouTube
ஆசியான் மாநாடு: பாதுகாப்பு காரணங்களுக்காக சில Rapid KL நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன!
தற்போதைய செய்திகள்

ஆசியான் மாநாடு: பாதுகாப்பு காரணங்களுக்காக சில Rapid KL நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.26-

47வது ஆசியான் உச்சநிலை மாநாடு நடைபெறுவதையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை சில ரெப்பிட் கேஎல் தொடர்வண்டி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. கிளானா ஜெயா, புத்ராஜெயா, காஜாங் ஆகிய மூன்று முக்கியப் பகுதிகளில் உள்ள அம்பாங் பார்க், கொன்லேய், பெர்சியாரான் கேஎல்சிசி, புக்கிட் பிந்தாங் உள்ளிட்ட நிலையங்கள் மூடப்பட்டன என்று ரெப்பிட் ரெயில் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், பயணிகள் அருகிலுள்ள மோனோரெல் நிலையங்களையோ அல்லது கிளானா ஜெயா வழித்தடத்தில் இருக்கும் கம்போங் பாரு நிலையத்தையோ பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. மற்ற தொடர்வண்டி நிலையங்களின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை என்று ரெப்பிட் கேஎல் உறுதிப்படுத்தியுள்ளதுடன், பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட, அதன் சமூக ஊடகப் பக்கங்கள் அல்லது PULSE செயலியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை