முன்னாள் பேரரசியாரும், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முன்னாள் அரசியாருமான துங்கு நஜிஹா துங்கு பெசார் புர்ஹானுதீன் காலமானார். அவருக்கு வயது 100.
கார்டியாக் வாஸ்குலர் மையம் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு இருந்த துங்கு நஜிஹா, இன்று காலை 6.33 மணியளவில் தமது இறுதி மூச்சை விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துங்கு நஜிஹா, நாட்டின் பத்தாவது மாமன்னர் துவாங்கு ஜாஃபர் துவாங்கு அப்துல் ரஹ்மான் னின் துணைவியார் ஆவர். துங்கு நஜிஹா வின் மறைவைத் தொடர்ந்து துக்கம் அனுசரிக்கும் வகையில் நெகிரி செம்பிலான் மாநில கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
துவாங்கு ஜாஃபர் துவாங்கு அப்துல் ரஹ்மான் நாட்டின் 10 ஆவது மாமன்னராக கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரையில் பதவி வகித்த வேளையில் துங்கு நஜிஹா நாட்டின் பேரரசியராக பொறுப்பு வகித்தார்.
நாட்டின் அரச பரிபாலனத்தில் கடந்த 1957 ஆம் ஆண்டு தொடங்கிய ஒன்பது ஆட்சியாளர்கள் மாமன்னர் பொறுப்பு வகிக்கும் சுழல் முறையில், முதலாவது சுற்று முடிவடைந்து , இரண்டாவது சுற்று 1994 ஆம் ஆண்டு தொடங்கிய போது துவாங்கு ஜாஃபர் - துங்கு நஜிஹா தம்பதியர் பத்தாவது மாமன்னராகவும், பேரரசியராகவும் பதவி வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


