Jan 24, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் பேரரசியார் துங்கு நஜிஹா காலமானார்
தற்போதைய செய்திகள்

முன்னாள் பேரரசியார் துங்கு நஜிஹா காலமானார்

Share:

முன்னாள் பேரரசியாரும், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முன்னாள் அரசியாருமான துங்கு நஜிஹா துங்கு பெசார் புர்ஹானுதீன் காலமானார். அவருக்கு வயது 100.

கார்டியாக் வாஸ்குலர் மையம் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு இருந்த துங்கு நஜிஹா, இன்று காலை 6.33 மணியளவில் தமது இறுதி மூச்சை விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துங்கு நஜிஹா, நாட்டின் பத்தாவது மாமன்னர் துவாங்கு ஜாஃபர் துவாங்கு அப்துல் ரஹ்மான் னின் துணைவியார் ஆவர். துங்கு நஜிஹா வின் மறைவைத் தொடர்ந்து துக்கம் அனுசரிக்கும் வகையில் நெகிரி செம்பிலான் மாநில கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

துவாங்கு ஜாஃபர் துவாங்கு அப்துல் ரஹ்மான் நாட்டின் 10 ஆவது மாமன்னராக கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரையில் பதவி வகித்த வேளையில் துங்கு நஜிஹா நாட்டின் பேரரசியராக பொறுப்பு வகித்தார்.

நாட்டின் அரச பரிபாலனத்தில் கடந்த 1957 ஆம் ஆண்டு தொடங்கிய ஒன்பது ஆட்சியாளர்கள் மாமன்னர் பொறுப்பு வகிக்கும் சுழல் முறையில், முதலாவது சுற்று முடிவடைந்து , இரண்டாவது சுற்று 1994 ஆம் ஆண்டு தொடங்கிய போது துவாங்கு ஜாஃபர் - துங்கு நஜிஹா தம்பதியர் பத்தாவது மாமன்னராகவும், பேரரசியராகவும் பதவி வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு