Jun 15, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சரவையில் பேசப்படவில்லை: அந்தோணி லோக் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

அமைச்சரவையில் பேசப்படவில்லை: அந்தோணி லோக் கூறுகிறார்

Share:

SRC International வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதத்தையும் விதித்த நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலிக்கு எதிராக கூறப்படும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முடிவை கடித வாயிலாக , நஜீப் வழக்கறிஞர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கும் சட்டத்துறை அமைச்சர் அஸாலினா ஓத்மான் சாயிட், அது குறித்து அமைச்சரவையில் கலந்து ஆலோசிக்கவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விவகாரத்தை அமைச்சர் அஸாலினா ஓத்மான், இந்த வாரம் அமைச்சரவைக் கூட்டதில் கொண்டு வருவாரா? என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
நீதிபதி முகமட் நஸ்லான், நீதித்துறை நன்னெறி கோட்பாட்டை மீறியுள்ளார் என்று ஊழல் தடுப்பு ஆணையம் வழங்கிய அறிக்கையின் முடிவை, ரகசியம் காக்கப்படாமல், நஜீப்பின் வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லாவிற்குக் கடித வாயிலாக தெரியப்படுத்தியிருப்பது குறித்து அமைச்சர் அஸாலினா பலத்த கண்டனத்திற்கு ஆளாகி வருகிறார்.

இந்நிலையில் நஜீப்பின் வழக்கறிஞருக்கு இந்த விவகாரத்தைத் தெரியப்படுத்துவதற்கு முன்னதாக இது குறித்து அமைச்சரவையில் அஸாலினா விவாதித்துள்ளாரா? என்ற கேள்விக்கு அந்தோணி லோக் மேற்கண்டவாறு பதில் அளித்துள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

அமைச்சரவையில் பேசப்படவில்லை: அந்தோணி லோக் கூறுகிறார் | Thisaigal News