பொறாமையின் காரணமாக தமது காதலியை கத்தியால் குத்தி உடலில் 18 இடங்களில் காயம் விளைவித்தப்பின்னர் ரயில் பாதையில் அத்துமீறி நுழைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஓர் இந்தியப் பிரஜையை உதவிப் போலீசார் வளைத்துப் பிடித்தர்.
இச்சம்பவம் சாலாக் சவுத், Express Rail Link தண்டவாளப்பகுதியில் நிகழ்ந்தது. முன்னதாக 30 வயதுடைய அந்த ஆடவர், கிளானா ஜெயாவில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் தமது காதலியான 40 வயது இந்தியப் பிரஜையை காயப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து, ரயிலில் மோதி தற்கொலை முயற்சியில் ஈடுபட முனைந்தாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி ஃபக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
தமது காதலி மற்றொரு ஆடவருடன் அந்தரங்க தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகித்த அந்த ஆடவர், அப்பெண்ணை கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எசிபி ஃபக்ருடின் குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


