பொறாமையின் காரணமாக தமது காதலியை கத்தியால் குத்தி உடலில் 18 இடங்களில் காயம் விளைவித்தப்பின்னர் ரயில் பாதையில் அத்துமீறி நுழைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஓர் இந்தியப் பிரஜையை உதவிப் போலீசார் வளைத்துப் பிடித்தர்.
இச்சம்பவம் சாலாக் சவுத், Express Rail Link தண்டவாளப்பகுதியில் நிகழ்ந்தது. முன்னதாக 30 வயதுடைய அந்த ஆடவர், கிளானா ஜெயாவில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் தமது காதலியான 40 வயது இந்தியப் பிரஜையை காயப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து, ரயிலில் மோதி தற்கொலை முயற்சியில் ஈடுபட முனைந்தாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி ஃபக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
தமது காதலி மற்றொரு ஆடவருடன் அந்தரங்க தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகித்த அந்த ஆடவர், அப்பெண்ணை கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எசிபி ஃபக்ருடின் குறிப்பிட்டார்.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்


