May 26, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தினால் ஏற்பட்ட மரணம், 6 ஆக உயர்ந்தது
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தினால் ஏற்பட்ட மரணம், 6 ஆக உயர்ந்தது

Share:

கோலாலம்பூர், டிச.2-


நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளத்தில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. ஆகக்கடைசியான நேற்று மாலையில் கிளந்தான், மாச்சாங்கில் கால்நடைகளை பார்வையிடுவதற்கு சென்ற இரண்டு முதியவர்கள் வெள்ளத்தில் சிக்கி மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் நாடு தழுவிய நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 24 பேராக உயர்ந்துள்ளது.

இந்த எண்ணிக்கை நேற்று மாலை 4 மணியளவில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 896 பேரா இருந்தது என்று வெள்ள பேரிடர் நிர்வாக மையம் தெரிவித்துள்ளது.
பேராவில் லாருட் மாத்தாங், செலாமா, ஹிலிர் பேராக், கிந்தா மற்றும் கம்பார் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கிளந்தான், திரெங்கானு, பகாங், ஜோகூர், மலாக்கா ஆகிய மாநிலங்களில் நிவாரண மையங்களில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்த வருகிறது. கெடா, நெகிரி செம்பிலான் பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு