Mar 17, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு படகுகளில் போதுமான ஃலைப் ஜாக்கெட்டுகள் இல்லையா? – பிபிசி மறுப்பு
தற்போதைய செய்திகள்

பினாங்கு படகுகளில் போதுமான ஃலைப் ஜாக்கெட்டுகள் இல்லையா? – பிபிசி மறுப்பு

Share:

ஜார்ஜ்டவுன், நவம்பர்.14-

பினாங்கு படகுச் சேவைகளில் ஈடுபட்டுள்ள படகுகளில், குறிப்பாக பூலாவ் டூயுங் படகில், மொத்தம் 3 உயிர்க்காப்பு ஜாக்கெட்டுகள் மட்டுமே உள்ளதாக எழுந்துள்ள புகார்களைப் பினாங்கு துறைமுக ஆணையமான பிபிசி மறுத்துள்ளது.

பினாங்கு துறைமுகத்தால் நிர்வகிக்கப்படும் அப்படகுகள் குறித்து, சிலர் பொய்யான செய்திகளைப் பரப்பி வருவதாக பிபிசி தெரிவித்துள்ளது.

இது போன்ற பொய்யான செய்திகளால், பொதுமக்களிடையே அச்சமும், குழப்பமும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் பிபிசி வருத்தம் தெரிவித்துள்ளது.

அதே வேளையில், ஒவ்வொரு படகிலும் 263 உயிர்க்காப்பு ஜாக்கெட்டுகள் சிறப்பு அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவசர நேரத்தில் படகு சிப்பந்திகள் அதனை எடுத்து பயணிகளுக்கு விநியோகம் செய்வார்கள் என்றும் பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது.

பினாங்கு படகுச் சேவைகளில் உயிர்க்காப்பு ஜாக்கெட்டுகள் குறைவாக உள்ளதாக அண்மையில், சமூக ஊடகங்களில் பரவிய செய்தியைத் தொடர்ந்து பிபிசி இவ்வாறு விளக்கமளித்துள்ளது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு