Jul 4, 2026
Thisaigal NewsYouTube
போலி விசா: ஆப்கானிஸ்தான் பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவது தடுக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

போலி விசா: ஆப்கானிஸ்தான் பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவது தடுக்கப்பட்டது

Share:

சிப்பாங், ஜூலை.29-

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு ஆப்கானிஸ்தான் பிரஜைகள், போலி விசாவைப் பயன்படுத்தி, மலேசியாவிற்குள் நுழையும் முயற்சியை மலேசிய எல்லைப் பாதுகாப்பு, கட்டுப்பாட்டு ஏஜென்சி வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கேஎல்ஐஏ ஒன்றில் அந்த ஏஜென்சி மேற்கொண்ட திடீர் சோதனையில் அந்த நான்கு ஆப்கானிஸ்தான் பிரஜைகளும் பிடிபட்டனர். சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மொத்தம் 132 அந்நியப் பிரஜைகளில், இந்த நான்கு ஆப்கானிஸ்தான் பிரஜைகளும் அடங்குவர்.

கேஎல்ஐஏ ஒன்றை வந்தடைந்தப் பின்னர் குடிநுழைவு முகப்பிடங்களுக்குச் செல்லாமல் விமான நிலையத்தின் பயணிகள் வந்தடையும் பகுதியிலேயே உலவிக் கொண்டிருந்த அந்த நான்கு ஆப்கானிஸ்தான் பிரஜைகளும் இறுதியில் பிடிபட்டதாக அந்த ஏஜென்சி தெரிவித்துள்ளது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது