Jun 16, 2026
Thisaigal NewsYouTube
மற்றவர்களின் 'மைகாட்டை' பயன்படுத்தினால் 3 ஆண்டுகள் சிறை, 20 ஆயிரம் அபராதம் - புடி95 திட்டம் குறித்து அரசாங்கம் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

மற்றவர்களின் 'மைகாட்டை' பயன்படுத்தினால் 3 ஆண்டுகள் சிறை, 20 ஆயிரம் அபராதம் - புடி95 திட்டம் குறித்து அரசாங்கம் எச்சரிக்கை

Share:

ஆர்.ஓ.என்95 பெட்ரோல் மானியத்தை பெறுவதற்காக மற்றவர்களின் மைகாட்டை அட்டையைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் என நிதி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேசிய பதிவுச் சட்ட விதிமுறை 1990, பிரிவு 25-இன் கீழ், சட்டப்பூர்வ அனுமதி இன்றி மற்றொருவரின் மைகாட்டை-ஐ பயன்படுத்துவது அல்லது வைத்திருப்பது கடுமையான குற்றமாகும் என்றும் தெரிவித்துள்ளது.

இக்குற்றத்தைப் புரிவோருக்கு, 20 ஆயிரம் ரிங்கிட் அபராதம், அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளதாக இன்று நிதியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பெட்ரோல் நிலையங்களில் புடி95 திட்டத்தின் கீழ் நடைபெறும் பரிவர்த்தனைகளில் மைகாட்டை சரிபார்ப்பு நடைமுறைகள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

Related News

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி