ஜொகூர் மாநிலத்தில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும், தாதியர்களுக்கும், புதிய வெகுமதி திட்டங்களையும் சம்பள விகிதங்களையும் வழங்க சுகாதார அமைச்சகமும், பொது சேவைத் துறையும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜோகூரில் உள்ள மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் மற்ற இடத்திற்கு மாற்றல் ஆகி செல்வதனால், சுல்தானா அமினா மருத்துவமனை, சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனை ஆகியவை மருத்துவர்கள் மற்றும் தாதியர்களின் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருவதாக ஜோகூர் சுகாதாரம் மற்றும் ஒற்றுமைக் குழுவின் தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்தார்.
இந்த பற்றாக்குறையைச் சரிச்செய்ய, ஜொகூர் மாநிலத்தில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்கும் ஏற்ற வெகுமதி திட்டத்தையும் சம்பள உயர்வையும், சுகாதார அமைச்சு வழங்க வேண்டும் என்று லிங் தியான் சூன் பரிந்துரைத்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


