ஜொகூர் மாநிலத்தில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும், தாதியர்களுக்கும், புதிய வெகுமதி திட்டங்களையும் சம்பள விகிதங்களையும் வழங்க சுகாதார அமைச்சகமும், பொது சேவைத் துறையும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜோகூரில் உள்ள மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் மற்ற இடத்திற்கு மாற்றல் ஆகி செல்வதனால், சுல்தானா அமினா மருத்துவமனை, சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனை ஆகியவை மருத்துவர்கள் மற்றும் தாதியர்களின் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருவதாக ஜோகூர் சுகாதாரம் மற்றும் ஒற்றுமைக் குழுவின் தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்தார்.
இந்த பற்றாக்குறையைச் சரிச்செய்ய, ஜொகூர் மாநிலத்தில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்கும் ஏற்ற வெகுமதி திட்டத்தையும் சம்பள உயர்வையும், சுகாதார அமைச்சு வழங்க வேண்டும் என்று லிங் தியான் சூன் பரிந்துரைத்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


