மலேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மாறிக்கொண்டே இருந்தால் முதலீட்டாளர்கள் யாரும் நாட்டிற்கு முதலீடு செய்ய வரமாட்டார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.
மலேசியாவின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வலுவான மற்றும் நிலையான அரசாங்கம் அமைவது மிக முக்கியம் என்று பிரதமர் கூறினார்.. ஒரு நிலையான அரசாங்கமின்றி, ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மாறிக்கொண்டே இருந்தால், நாட்டிற்கு வரக்கூடிய முதலீட்டாளர்கள் யாரிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று பிரதமர் கேள்வி எழுப்பினார்.
இன்று பேரா, மஞ்சோய் யில் உள்ள ஹைபர் மார்கெட்டில் ராஹ்மா காசிஹ் சயாங் மெகா செலே எனும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


