Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மலேசியாவிற்கு முதலீடு செய்ய வர மாட்டார்கள்
தற்போதைய செய்திகள்

மலேசியாவிற்கு முதலீடு செய்ய வர மாட்டார்கள்

Share:

மலேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மாறிக்கொண்டே இருந்தால் முதலீட்டாளர்கள் யாரும் நாட்டிற்கு முதலீடு செய்ய வரமாட்டார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.

மலேசியாவின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வலுவான மற்றும் நிலையான அரசாங்கம் அமைவது மிக முக்கியம் என்று பிரதமர் கூறினார்.. ஒரு நிலையான அரசாங்கமின்றி, ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மாறிக்கொண்டே இருந்தால், நாட்டிற்கு வரக்கூடிய முதலீட்டாளர்கள் யாரிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று பிரதமர் கேள்வி எழுப்பினார்.

இன்று பேரா, மஞ்சோய் யில் உள்ள ஹைபர் மார்கெட்டில் ராஹ்மா காசிஹ் சயாங் மெகா செலே எனும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News

மலேசியாவிற்கு முதலீடு செய்ய வர மாட்டார்கள் | Thisaigal News