மலேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மாறிக்கொண்டே இருந்தால் முதலீட்டாளர்கள் யாரும் நாட்டிற்கு முதலீடு செய்ய வரமாட்டார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.
மலேசியாவின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வலுவான மற்றும் நிலையான அரசாங்கம் அமைவது மிக முக்கியம் என்று பிரதமர் கூறினார்.. ஒரு நிலையான அரசாங்கமின்றி, ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மாறிக்கொண்டே இருந்தால், நாட்டிற்கு வரக்கூடிய முதலீட்டாளர்கள் யாரிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று பிரதமர் கேள்வி எழுப்பினார்.
இன்று பேரா, மஞ்சோய் யில் உள்ள ஹைபர் மார்கெட்டில் ராஹ்மா காசிஹ் சயாங் மெகா செலே எனும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


