மலேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மாறிக்கொண்டே இருந்தால் முதலீட்டாளர்கள் யாரும் நாட்டிற்கு முதலீடு செய்ய வரமாட்டார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.
மலேசியாவின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வலுவான மற்றும் நிலையான அரசாங்கம் அமைவது மிக முக்கியம் என்று பிரதமர் கூறினார்.. ஒரு நிலையான அரசாங்கமின்றி, ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மாறிக்கொண்டே இருந்தால், நாட்டிற்கு வரக்கூடிய முதலீட்டாளர்கள் யாரிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று பிரதமர் கேள்வி எழுப்பினார்.
இன்று பேரா, மஞ்சோய் யில் உள்ள ஹைபர் மார்கெட்டில் ராஹ்மா காசிஹ் சயாங் மெகா செலே எனும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


