ஜோகூர் மாநிலத்தில் இனம், மதம், மொழி ஆகிய பின்னணிகளை பாராமல் பங்சார் ஜோகூர் எனும் "ஜோகூர் மக்கள்" சுலோகத்திற்கு அதீத முக்கியத்துவம் அளிப்பதில் முன்னுரிமை வழங்கி வரும் ஆட்சியாளரான மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்காண்டார்,வெளிநாடுகளுக்கு செல்லும் ஒவ்வொரு முறையும், தம்மை ஒரு மலேசியர் என்று முதலில் அறிமுகப்படுத்திக்கொள்வதில் அலாதி பெருமைப் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருக்கும் பட்சத்தில் தம்மை பற்றி யாரும் வினவினால், தாம் எப்போதுமே தம்மை ஒரு மலேசியர் என்றே அடையாளப்படுத்திக்கொள்வதாக ஜோகூர் பாரு அரண்மனையில் சின் சியு டேய்லி சீன நாளிதழுக்கு வழங்கிய சிறப்புப்பேட்டியில் சுல்தான் இப்ராஹிம் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஆட்சியாளராக நியமிக்கப்பட்டு, 2015 ஆம் ஆண்டு அரியணையில் அமர்ந்தது முதல் மேன்மைத் தங்கிய ஜோகூர் சுல்தான், மலாய்,ஆங்கில நாளிதழ்கள் மற்றும் மின் ஊடகங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் சீனப்பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த இருப்பது இதுவே முதல் முறையாகும்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


