Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மாணவனை கொலை செய்ததாக மூத்த அதிகாரி 30 நாட்கள் விசாரணை
தற்போதைய செய்திகள்

மாணவனை கொலை செய்ததாக மூத்த அதிகாரி 30 நாட்கள் விசாரணை

Share:

ஈப்போ , மே 14-

17 வயது பதின்ம வயது இளைஞனை கொலை செய்ததாக குற்றச்சாட்டப்பட்டிருக்கும் மூத்த போலீஸ் அதிகாரியிடம் 30 நாட்கள் விசாரணை மேற்கொள்ள ஈப்போ உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அந்த வழக்கு விசாரணையை வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி 2025 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி வரையில் நிர்ணயிக்க நீதிபதி டத்தோ பூபிந்தர் சிங் குச்சரன் சிங் ப்ரீத் தெரிவித்தார்.

முன்னதாக, குற்றச்சாட்டப்பட்டிருக்கும் 46 வயது முகமது நஸ்ரி அப்துல் ரசாக் என்கிற அந்த மூத்த போலீஸ் அதிகாரி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது குற்றம் புரியவில்லை என்று கூறியதுடன் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கை மறுபரிசீலனை செய்வதற்கு வரும் ஜூலை 1 ஆம் தேதி நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி பிற்பகல் 12.40 மணியளவில் ஈப்போ, செக்கோலா மெனெங்கா கேபாங்சான் ஜாத்தி அருகிலுள்ள ஜாலான் தாமான் ஜாத்தி 1 -யில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து