May 6, 2026
Thisaigal NewsYouTube
ஷா ஆலம்: தளவாடத் தொழிற்சாலையும் கார் பட்டறையும் தீயில் கருகி நாசம்!
தற்போதைய செய்திகள்

ஷா ஆலம்: தளவாடத் தொழிற்சாலையும் கார் பட்டறையும் தீயில் கருகி நாசம்!

Share:

ஷா ஆலாம், ஜனவரி.25-

ஷா ஆலம், செக்‌ஷன் 16-இல் உள்ள தளவாடத் தொழிற்சாலை ஒன்றும் கார் பழுது பார்க்கும் பட்டறை ஒன்றும் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 85 விழுக்காடு சேதமடைந்தன. மதியம் 12.32 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்ற தீயணைப்புத் துறை, ஆறு நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டதாக சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு – மீட்புப் படைத் துணை இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

ஷா ஆலம், கிள்ளான், பெட்டாலிங் ஜெயா உள்ளிட்ட பல நிலையங்களைச் சேர்ந்த 34 தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணிநேரம் போராடி மதியம் 1.13 மணியளவில் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தீ விபத்திற்கான காரணமும் சொத்து இழப்பு குறித்த விபரங்களும் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றன.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்