நெகிரி செம்பிலான், கோலாக் கிளாவாங், முக சவுக் என்ற இடத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது மான் என நினைத்து, தமது நண்பரை சுட்டுக்கொன்ற ஆடவருக்கு எதிரான தடுப்புக் காவல், மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வரும் 52 வயதுடைய அந்த நபருக்கு எதிரான தடுப்புக் காவல், வரும் மே 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜெலெபு மாவாட்ட போலீஸ் தலைவர், துணை சுபரித்தென்டன்மஸ்லான் உடின் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில், முக சவுக்கில் உள்ள ஒரு வனப்பகுதிக்கு வேட்டையாடச் சென்ற போது உள்ளூரில் தயாரிக்கப்பட்டது என்று நம்பப்படும் துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தி, 61 வயதுடைய ஆடவரை அந்நபர் சுட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று மஸ்லான் உடின் குறிப்பிட்டார்.

Related News

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது

ஜோகூர் ஆர்&ஆர் பகுதியில் மக்களோடு மக்களாக காலை உணவருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராகிம்

கோல திரங்காணுவில் கோர விபத்து : 18 வயது இளைஞரின் தலை துண்டானது


