நெகிரி செம்பிலான், கோலாக் கிளாவாங், முக சவுக் என்ற இடத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது மான் என நினைத்து, தமது நண்பரை சுட்டுக்கொன்ற ஆடவருக்கு எதிரான தடுப்புக் காவல், மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வரும் 52 வயதுடைய அந்த நபருக்கு எதிரான தடுப்புக் காவல், வரும் மே 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜெலெபு மாவாட்ட போலீஸ் தலைவர், துணை சுபரித்தென்டன்மஸ்லான் உடின் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில், முக சவுக்கில் உள்ள ஒரு வனப்பகுதிக்கு வேட்டையாடச் சென்ற போது உள்ளூரில் தயாரிக்கப்பட்டது என்று நம்பப்படும் துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தி, 61 வயதுடைய ஆடவரை அந்நபர் சுட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று மஸ்லான் உடின் குறிப்பிட்டார்.

Related News

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

விசாரணை ஆவணங்கள் சட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன

ஷம்சுல் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டதா, இல்லையா?

மத்திய கிழக்கிலிருந்து முதல் கட்டமாக மீட்கப்பட்டவர்கள் கே.எல்.ஐ.ஏ (KLIA) விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரை இறங்கினர்!

ஆடவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும்


