நெகிரி செம்பிலான், கோலாக் கிளாவாங், முக சவுக் என்ற இடத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது மான் என நினைத்து, தமது நண்பரை சுட்டுக்கொன்ற ஆடவருக்கு எதிரான தடுப்புக் காவல், மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வரும் 52 வயதுடைய அந்த நபருக்கு எதிரான தடுப்புக் காவல், வரும் மே 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜெலெபு மாவாட்ட போலீஸ் தலைவர், துணை சுபரித்தென்டன்மஸ்லான் உடின் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில், முக சவுக்கில் உள்ள ஒரு வனப்பகுதிக்கு வேட்டையாடச் சென்ற போது உள்ளூரில் தயாரிக்கப்பட்டது என்று நம்பப்படும் துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தி, 61 வயதுடைய ஆடவரை அந்நபர் சுட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று மஸ்லான் உடின் குறிப்பிட்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


